மதுரையில் பிரபல கொள்ளையன் 'மின்னல்' மணி கைது: 133 பவுன் நகை பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

Minnal Mani
மதுரை: மதுரையில் பிரபல கொள்ளையன் மின்னல் மணி என்பவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து 133 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகள் மற்றும் குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஊமச்சிகுளம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த படையினர் நகை கொள்ளையர்களை குறிவைத்து வலை வீசித் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிமேடு மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன் என்ற மின்னல் மணி மோட்டார் சைக்கிளில் வந்தபோது போலீசார் அவனை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவன் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து முதல் கட்டமாக 26 பவுன் நகையை மீட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவனிடம் இருந்து 107 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் என்கவுண்டரில் பலியான வெள்ளை ரவியின் கூட்டாளியாக இருந்துள்ளான். அவன் வெள்ளை ரவியின் அண்ணன் மகளை திருமணம் செய்துள்ளான். இதுவரை மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ள மின்னல் மணி மீது கொள்ளை, கொலை என 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+