ஆரல்வாய்மொழியில் ஒரே நாளில் 7 இடங்களில் கொள்ளை: மக்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

குமரி: ஆர்ல்வாய்மொழியில் ஒரே நாளில் 7 இடங்களில் கொள்ளை கும்பல் தங்கள் கைவரிசயை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தானுமலையான் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள். நேற்று இரவு அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு்க்கு சென்றுவிட்டார். பூட்டை உடைத்து அவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் பீரோவில் இருந்த ரூ.4,500 ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளது.

இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த காளியான்பிள்ளை, ராஜன் ஆகியோர் வீடுகளிலும் கொள்ளை கும்பல் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது. மேலும் மெயின் ரோட்டில் உள்ள கரடிமாடசாமி கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். சண்முகம்மாள் ஹோட்டலில் புகுந்து அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இது தவிர செல்லையா பிள்ளை, பாபு ஆகியோரது வீ்டுகளிலும் பூட்டை உடைத்து கொள்ளை கும்பல் உள்ளே சென்றுள்ளது. ஆனால் அவர்கள் வீட்டில் நகை, பணம் எதுவும சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளது. அதுமட்டுமின்றி சுகாதாரத் துறை ஊழியர் கண்ணன், செருப்புக் கடை நடத்தி வரும் சேக் முகமது, கிரேன் ஆபரேட்டர் ராஜா ஆகிய 3 பேர் வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சக்கர வாகனங்களை திருட முயன்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் பூட்டியிருந்த வீடுகள், கடைகள், கோவில் உள்ளிட்ட இடங்களில் புகுந்து கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியதால் நானுமலையான் புதூர் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+