சிபிஐ இயக்குனர் நியமனம் தொடர்பான பாஜகவின் நிலைப்பாடு தவறானது: ராம்ஜெத்மலானி
டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-ன் இயக்குனரை பிரதமர் மன்மோகன்சிங் நியமித்ததற்கு பாரதிய ஜனதா கட்சி தெரிவித்தது தவறானது என்று அக்கட்சியின் மூத்த தலைவரான ராம்ஜெத்மலானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்பால் மசோதா மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் சிபிஐ இயக்குனரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுதான் நியமிக்க வேண்டும் என்பது பாஜகவின் வாதம். இதை சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் கடிதம் அனுப்பியிருந்தனர். ஆனால் லோக்பால் மசோதா மீதான பரிந்துரைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கு காலதாமதமாகும் என்பதால் சிபிஐ போன்ற முக்கிய அமைப்புக்கு இயக்குனரை நியமிக்காமல் இருக்க முடியாது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறிவிட்டார்.
இந்நிலையில் இந்த விவகாரம் பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜகவின் கலகக்குரலான ராம்ஜெத்மலானி , கட்சித் தலைவர் கத்காரிக்கு எழுப்பியுள்ள கடிதத்தில், சிபிஐ இயக்குனர் நியமன விவகாரத்தில் கட்சி தவறான நிலையை எடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications