இனி நான் எடுக்கப் போவது புதிய அவதாரம்... காட்டப் போவது புதிய ஆட்டம்: ராமதாஸ்

சனிக்கிழமை இரவு விழுப்புரத்தில் பாமக சார்பில் ஒரு பொதுக்கூட்ட்ம் நடைபெற்றது. அதில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் திமுக தலைவர் கருணாநிதியைக் கடுமையாக சாடிப் பேசினார். ஜாதி வெறியைத் தூண்டியவர் கருணாநிதிதான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ராமதாஸின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...
தமிழக அரசியலில் இனி புது அரசியல், புது நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தை 46 ஆண்டுகளாக ஆண்டு, சீரழித்து, சின்னா பின்னமாக்கி விட்டனர். இருளில் ஆழ்த்திய இரு திராவிட கட்சிகளையும், ஒழித்துவிட்டு அந்த இடத்தில் நாம் உட்கார வேண்டும். இதை ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கின்றனர். நம்மைத் தவிர வேறு யாரும் இதைச் செய்ய முடியாது.
இரண்டு திராவிடக் கட்சிகளும், இந்த 46 ஆண்டுகளில் தமிழகத்தை சொர்க்க பூமியாக மாற்றியிருக்க வேண்டும். வறுமை போயிருக்க வேண்டும். 3 வேளையும், மக்கள் சாப்பிட்டிருக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிளஸ்2-வுக்கு மேல் படித்திருக்க வேண்டும். இளைஞர்கள் தமிழில் புலமையும், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறமையும் பெற்றிருக்க வேண்டும். விவசாயம் செழித்திருக்க வேண்டும்.
ஆனால் நடந்தது என்ன..? மதுக்கடைகளுக்கும், சினிமா தியேட்டர்களுக்கும் போகச் சொல்லி இளைஞர்களை மதி மயங்க வைத்துள்ளனர்.
அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு 45 சதவிதம் ஓட்டுக்கள்தான் உள்ளது. மீதமுள்ள 55 சதவித ஓட்டுக்கள் நடுநிலையாளர்கள் ஓட்டு. இவர்கள் அ.தி.மு.க. தி.மு.க.வுக்கு எதிரானவர்கள். இவர்களின் ஓட்டு பா.ம.க.வுக்குதான் கிடைக்கும். இந்த இரு கட்சிகளின் ஆட்டத்தை அடக்க பா.ம.க. புது அவதாரம் எடுத்துள்ளது.
1987ல் நான் வன்னியர் சங்கம் தொடங்கும் போது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தார். நான் அப்போதே கருணாநிதியைத்தான் எதிரி எனக் கூறினேன். அரசியலில் வன்னியரை ஓரங்கட்டியுள்ளார். தர்மபுரி கலவரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் கருணாநிதி என் மீது வேண்டுமென்றே பழி போடுகிறார்.
கருணாநிதி, தமிழரா அல்லது திராவிடரா என்பதை முதலில் கூற வேண்டும். கர்நாடகாவிலும் திராவிடர் உள்ளனர். அங்குச் சென்று பேசி காவிரியில் தண்ணீரைக் கொண்டுவர முயற்சி செய்யட்டும். அவர் அங்கே போய் திராவிடத் தலைவன் எனக் கூறிக் கொள்ள வேண்டியதுதானே.
தமிழுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு உள்ளது? கருணாநிதி தமிழகத்தை அழித்ததற்கு ஆதாரம் உள்ளது. அவர் என்னுடன் பேச முடியுமா? இது திராவிடம் இல்லை! தீராத விஷம்! ஜாதி மதம் இல்லாத சமுதாயம் படைப்போம் என்றார். ஆனால், ஜாதி வெறியைத் தூண்டி! அதற்கான அவசியம் இப்போது இல்லை.
நாம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியிலும், சட்டப் பேரவைத் தேர்தலில் 110 தொகுதிகளிலும் படுத்துக்கொண்டே ஜெயிப்போம் என்று பேசினார் ராமதாஸ்.
இரு திராவிடக் கட்சிகளையும் இப்படிக்கடுமையாக தாக்கும் டாக்டர் ராமதாஸ், இந்த இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துத்தான் இத்தனை காலமாக அரசியல் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications