சிபிஐ இயக்குனர் நியமனத்தில் அருண் ஜேட்லியின் 'உள்குத்து': போட்டு உடைக்கும் ஜெத்மலானி!
சிபிஐ இயக்குனர் நியமனத்தில் பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி ஏன் தலையிடுகிறார் என்று விவரித்து பாஜக தலைவர் கத்காரிக்கு ராம்ஜெத்மலானி மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பாஜகவில் நிதின் கத்காரிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியதால் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் ராம்ஜெத்மலானி. அவரை கட்சியிலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்று விளக்க நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதனையெல்லாம் கண்டு கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருந்த ஜெத்மலானி தாம் கூறியபடியே மீண்டும் கத்காரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
ராம்ஜெத்மலானி அனுப்பியிருக்கும் 2-வது கடிதத்தில் சிபிஐ இயக்குனர் நியமன விவகாரத்தில் அருண்ஜேட்லி ஏன் தலையிடுகிறார் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மத்திய அரசு ரஞ்சித் சின்ஹாவை சிபிஐ இயக்குனராக நியமித்திருக்கிறது. இதற்கு டெல்லி போலீஸ் கமிஷனராக இருக்கும் நீரஜ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தார். நீரஜ்குமார் வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், அருண் ஜேட்லியின் ஜூனியர்கள். இதனாலேயெ இந்த விவகாரத்தில் அவர் தலையிடுகிறார் என்று போட்டுடைத்திருக்கிறார் ஜெத்மலானி.
இதேபோல் லோக்பால் மசோதா தொடர்பாக அருண் ஜேட்லியும், சுஷ்மா ஸ்வராஜும் தம்மிடம் ஆலோசனை நடத்தவில்லை என்று சுஷ்மாவுக்கு எதிராகவும் ஒரு புகாரை அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார் ராம்ஜெத்மலானி.
ஆனால் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்று அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
இதனிடையே ராம் ஜெத்மலானியை கட்சியை விட்டு நீக்குவது குறித்து பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை கூடி ஆலோசனை நடத்தியுள்ளது.
வாக்குகள் பறிபோகும்
இந் நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராம் ஜெத்மலானி, நிதின் கத்காரியின் நடவடிக்கையால் பாஜக தற்கொலைப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. என் மீது நடவடிக்கை மேற்கொண்டால் பாஜக பல லட்சம் வாக்குகளை பறிகொடுக்க நேரிடும் என்றார்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications