தமிழகத்துக்கு மின்சாரம் அனுப்ப வசதி கிடையாது: கையை விரித்தேவிட்டது மத்திய அரசு!
டெல்லி: தமிழக அரசு கோருவது போல் டெல்லி மாநில அரசு ஒப்படைக்கும் மின்சாரத்தை தர இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதே பதிலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய மின் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவும் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி மாநில அரசானது 1721 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறது. இந்த திரும்ப ஒப்படைக்கும் மின்சாரத்தை மின்பற்றாக்குறையில் இருக்கும் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 7,8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய இன்றுவரை கால அவகாசம் கொடுத்து உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொது மத்திய மின்சார ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தென் மத்திய மின் தொகுப்பு வழியாக தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு செல்ல போதுமான கட்டமைப்பு இல்லை. இதனால் மின்சாரத்தை வழங்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கை மீதான பதிலை தமிழக அரசு அளிக்க நீதிபதிகள் கால அவகாசம் அளித்து விசாரணையை டிசம்பர் 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மக்களவையில் மின்சார விவகாரம்
இதனிடையே மக்களவையில் தமிழக மின்பற்றாக்குறை பற்றி பேசிய அ.தி.மு.க. எம்.பி. செம்மலை, டெல்லி ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்கக் கோரினார்.
இதற்குப் பதிலளித்த மத்திய மின்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, தமிழக மின்பற்றாக்குறை குறித்து நான் அறிவேன். ஆனால் டெல்லி திருப்பிக் கொடுத்த உபரி மின்சாரத்தை அனுப்ப போதுமான வசதிகள் இல்லை என்பதால் சிக்கல் நீடிக்கிறது. மாநிலங்களுக்கு உதவி செய்ய தயாராக இருந்தாலும் தங்களது மின் தட்டுப்பாட்டை போக்க வேண்டியது மாநிலங்களின் கடமைதான் என்றார்.
-
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications