அப்பாடா...!! ஒருவழியா மேட்டூர் வந்தது காவிரி நீர்!!
Subscribe to Oneindia Tamil

காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிடஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஒருநாள் தாமதமாக கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட்டது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில அரசு வருத்தமும் தெரிவித்தது.
இந்த நீர் நேற்று முன்தினம் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதன் பின்னர் நேற்று காலையில் மேட்டூர் அணையை வந்தடைந்தது. காவிரியில் கர்நாடகம் திறந்த நீரை ஆய்வு செய்வதற்காக மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் மற்றும் ஊழியர்கள் பிலிகுண்டுலுவில் முகாமிட்டிருந்தனர்.
நேற்று மாலையில் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications