'பெப்சி' விளம்பரத்தில் பியான்ஸ்... ரூ. 262 கோடிக்கு ஒப்பந்தமானார்!
நி்யூயார்க்: பிரபல அமெரிக்க பாப் பாடகி பியான்ஸ் மிகப் பெரிய தொகைக்கு பெப்சி நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதாவது 262 கோடியே 74 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு அவரை பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பியான்ஸை விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதோடு அவரது படத்தையும் பெப்சி பாட்டில்கள், கேன்களில் போட்டு உலகம் பூராவும் விற்பனைக்கு விடவுள்ளதாம் பெப்சி.

எனவே தனது விளம்பரத்திற்கு பியான்ஸை புதிதாக தேர்வு செய்துள்ளது பெப்சி. அதன்படி தனது விளம்பரங்களுக்கு பியான்ஸை பயன்படுத்தும் பெப்சி தனது சில தயாரிப்புகளில் அவரது படத்தையும் பிரசுரித்து வெளியிடவுள்ளது. பியான்ஸ் படம் இடம் பெற்ற இந்த சிறப்பு பாட்டில்களும், கேன்களும் குறிப்பிட்டா காலத்திற்கு உலகம் பூராவும் விற்பனைக்கு விடப்படும்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பியான்ஸ் படம் பொறிக்கப்பட்ட பெப்சி குளிர்பானங்கள் விற்பனைக்கு வரவுள்ளன. அதை பியான்ஸே தொடங்கி வைப்பார். இதற்காக பிரமாண்டமான நிகழ்சசிக்கும் பெப்சி தயாராகி வருகிறது.
மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பியான்ஸின் ஒரு நிகழ்ச்சியையும் ஸ்பான்சர் செய்யப் போகிறது பெப்சி. 2013 தொடக்கத்தில் பியான்ஸ், பெப்சியின் புதிய விளம்பரங்களில் நடிக்கவுள்ளார்.
31 வயதாகும் பியான்ஸ், இசை, வீடியோ, திரைப்படம் என சக கலைகளிலும் கலக்கி வரும் சகலாகலாவல்லி என்பது நினைவிருக்கலாம். 16 கிராமி விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். இவரது இசைத் தட்டுக்கள் 10 கோடிக்கும் மேலாக விற்னையாகி சாதனை படைத்துள்ளன. இவரது கணவர் ராப் கலைஞர் ஜே இசட் ஆவார். இசையுலகில் அதிக வருவாய் ஈட்டி வரும் தம்பதி இவர்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications