நீடிக்கும் குறைந்த காற்றழுத்தம்- நாளை முதல் தென்மாவட்டங்களில் கனமழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் நீடிப்பதால் தென் மாவட்டங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கிறது. இது மேற்கு நோக்கி நகர்கிறது.
இதனால் நாளை முதல் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடலோரப்பகுதிகளில் மழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications