பாகிஸ்தானின் கைபர் சந்தையில் குண்டுவெடிப்பு- 15 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கைபர்: பாகிஸ்தான் நாட்டில் இன்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையோர மாவட்டமான கைபரின் ஜம்ரூத் நகர் சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 15 பேர் பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இக்குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இப்பிராந்தியத்தில் சனிக்கிழமையன்று பெஷாவர் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியிருந்த இரண்டு நாட்களுக்குள் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications