எம்.பி தேர்தலில் 40 தொகுதிகளில் வெல்ல வேண்டும்... எம்.ஜி.ஆர் நினைவு தினத்தில் ஜெ. உறுதி மொழி

அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரன் 25 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு இன்று காலை 10 மணிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
நினைவிடம் அருகே அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு வந்தார்.அங்கு உறுதி மொழி ஏற்கும் நிகழச்சியில் கலந்து கொண்டார் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழியை வாசிக்க கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதி மொழி எற்றுக் கொண்டனர்.
உறுதிமொழிகளை வாசித்த, அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட முயற்சி மேற்கொண்ட முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தார்.
40 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் கட்சித்தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என்றும் உறுதிமொழி ஏற்பின்போது அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications