குஜராத்தில் தாய்மாமனால் கற்பழிக்கப்பட்டு முற்புதரில் வீசப்பட்ட 2 வயது குழந்தை பலி

Subscribe to Oneindia Tamil

வதோதரா: குஜராத்தில் தாய்மாமனால் கற்பழிக்கப்பட்டு முற்புதரில் வீசப்பட்ட 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஹலோல் நகரில் நேபாளைத்தைச் சேர்ந்த தம்பதியின் 2 வயது பெண் குழந்தையை அதன் தாய் மாமனே கற்பழித்துவிட்டு முற்புதரில் வீசிச் சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று முற்புதர் ஒன்றில் 2 வயது குழந்தை கிடந்ததைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குழந்தையை மீட்ட பெற்றோர் அதை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வதோதராவில் உள்ள எஸ்எஸ்ஜி மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே குழந்தையின் வீட்டுக்கு அடிக்கடி வந்து இந்த கொடூரச் செயலை செய்த தாய் மாமன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இதையடுத்து குழந்தையின் தாய் மாமன் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் குழந்தையை சீரழித்தவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அந்த தம்பதி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து ஹலோல் நகரில் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+