For Daily Alerts
Just In
மலேசியால் பயங்கர வெள்ளம்... 14,000 பேர் வீடிழப்பு, 2 பேர் பலி
கோலாலம்பூர்: மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்தால் பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 2 பேர் பலியாகியுள்ளனர்.
கெமான் என்ற இடத்தில் உள்ள பகிட் மென்டாக் என்ற பகுதியில் 15 வயது பையன் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தானஅ.
அந்தப் பையன் உள்ளிட்ட சிலரை படகில் மீட்டு வந்து கொண்டிருந்தபோது அவன் தடுமாறி வெள்ள நீரில் மூழ்கி விட்டான். பலத்த வெள்ளம் என்பதால் மின்னல் வேகத்தில் அந்தப் பையன் அடித்துச் செல்லப்பட்டு விட்டான். அவனது நண்பனும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். அவனும் பலியாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மழை வெள்ளத்திற்கு இதுவரை 14,000 பேர் வரை வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
English summary
The floods in the east cost of Malaysia have claimed one more life, bringing the death toll to two thus far. In the latest incident, a 15-year old boy drowned after he fell overboard a sampan near his home in Bukit Mentok, Kemaman at 2pm Wednesday. Nearly 14,000 people have lost their houses and other belongings.
Story first published: Wednesday, December 26, 2012, 18:13 [IST]