பயங்கரவாத எதிர்ப்பு- இந்தியாவுக்கு பயிற்சி கொடுக்கிறாராம் இலங்கை கோத்தபாய

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு இலங்கையின் உதவியையும், பயிற்சியையும் வழங்க தயாராக இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கைக்கு கடந்த மாதம் 20-ந் தேதி சென்றிருந்த இந்திய ராணுவ தளபதி பிக்ரம் சிங், கோத்தபாய ராஜபக்சவை நேரில் சந்தித்துப் பேசியபோது இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குரித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டுக்கு கருத்து தெரிவித்த கோத்தபாய, "இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் சமீபத்தில் இலங்கை வந்தபோது இதனை நான் தெரிவித்திருந்தேன்" என்று கூறியுள்ளார்.

"பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் நாங்கள் பயிற்சி மட்டுமன்றி, பயிற்சி திட்டம் ஒன்றையும் ஒன்றினையும் உருவாக்கியுள்ளோம். இந்தப் பயிற்சிகளை பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் ஏனைய நாடுகளுக்கும் வழங்க நாங்கள் முன்வந்துள்ளோம்.. இந்தியாவிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அவர்களுக்கு உரிய பயிற்சி கொடுக்க முடியும். இது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவேண்டியது இந்திய ராணுவத் தளபதிதான்" என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

மேலும் "இந்தியாவில் அரசியல் நெருக்கடி நிலவிய போது இந்திய ராணுவத்துடன் நல்லுறவை பேணி வந்துள்ளோம். இந்திய ராணுவத்துக்கு பயிற்சி வழங்குவது என்றால், அது கூட்டுப் பயிற்சியாகவே இருக்கமுடியும்" என்றும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+