நாடார்கள் பற்றிய சர்ச்சைக்குரிய செய்தி: பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு
டெல்லி: சிபிஎஸ்சி பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயத்தைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த சர்ச்சைப் பகுதிகள் நீக்கப்படும்.
சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நாடார் சமுதாயம் பற்றிய தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை உருவானது. பாடப்புத்தகத்தில் உள்ள தவறான, சர்ச்சைக்குரிய பாடப்பகுதியை நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினர்.
பாடப்புத்தகத்தில் உள்ள தவறான தகவல்களை நீக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நாடார் அமைப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் நாடார் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் டெல்லி சென்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி பல்லம் ராஜுவை நேரடியாக சந்தித்தும் முறையிட்டனர்.
சர்ச்சைக்குரிய பாடப்பகுதிகளை நீக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்பட்டதால் அடுத்த ஆண்டுமுதல் அந்த பாடப்பகுதிகள் நீக்கப்படும் என்று அறிவித்தது. இது தொடர்பாக சி.பி.எஸ்.சி.இ. பாடத்திட்டத்தை உருவாக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைப்புக்கும் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, நாடார் சமுதாயம் தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பகுதிகள் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நீக்கப்படும் என்று என்.சி.இ.ஆர்.டி. அறிவித்தது.
இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல், நாடார்கள், கள் இறக்கும் தொழிலை செய்து வந்தவர்கள், திருவாங்கூர் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் என்ற பகுதிகள் நீக்கப்படும் என மத்திய மனிதவள அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். பாடத்திற்கு பொருத்தமில்லாத காரணத்தினால் அவற்றை நீக்க என்.சி.இ.ஆர்.டி. முடிவுசெய்துள்ளது என்றும் மற்றபடி, நாடார் சமுதாயம் தொடர்பான இதர பாடப்பிரிவுகள் பாடப்புத்தகத்தில் இடம்பெறும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications