அடகுக் கடைகள் மூடலுக்கு எதிர்ப்பு- தேனிவாசிகள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டத்தில் ஒரு சில அடகுக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் பழனியில் உள்ள நகை அடகுக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் நகைகளை அடகு வைத்திருந்தவர்கள் நேற்று பணத்தை செலுத்தி நகைகளை திரும்பப் பெற வந்தனர். ஆனால் அவர்களிடம் நாளைக்கு வந்து பணத்தை செலுத்தி நகைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு ஊழியர்கள் கூறினர்.
இதையடுத்து இன்று காலையில் அங்கு சென்ற பொதுமக்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அடகுக் கடை திறக்கவில்லை. இதேபோல் அடகுக் கடையின் மற்ற கிளைகளும் மூடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications