பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டி பாலத்தில் தாறுமாறாக ஓடிய ஆம்னி பஸ்.. சுவரில் மோதியது..

நேற்றிரவு 9 மணிக்கு இந்த விபத்து நடந்தது. பெங்களூர்ல் மடிவாளாவில் இருந்து திருவனந்தபுரத்துக்குக் கிளம்பிய அந்த எஸ்ஆர்எம் நிறுவன பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர்.
பஸ்ஸை ஷிஜூ என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். பஸ்ஸை எடுத்ததில் இருந்தே படுவேகத்தில் அவர் செலுத்தியதாக பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர்.
பொம்மனஹள்ளியைக் கடந்ததும் எலெக்ட்ரானிக் சிட்டி பாலத்தில் ஏறிய அந்த பஸ் படுவேகத்தில் சென்றது. மிகக் குறுகலான அந்தப் பாலத்தில் சென்ற சில பஸ்களை ஓவர்டேக் செய்து கொண்டு சென்றார் ஷிஜூ.
இந் நிலையில் திடீரென பஸ்ஸின் கட்டுப்பாட்டை டிரைவர் இழந்தார். பாலத்தின் மையத் தடுப்பில் மோதிய பஸ் நிலை தடுமாறி இடதுபுறமாகத் திரும்பி பாலத்தின் சுவரின் மீது மோதியது. சுவர் உடையாததால் பஸ் பாலத்தைவிட்டு கீழே பாயவில்லை.
ஆனால், பஸ் மோதியதில் ஒரு மின்கம்பம் உடைந்து கீழே ஓசூர் ரோட்டில் விழுந்தது. இந்த மின் கம்பம் கீழே நின்றிருந்த வரதராஜுலு (20) என்பவர் மீது விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் இறந்தார்.
விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகாமை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.












Click it and Unblock the Notifications