'மருத்துவர் ராமதாசு' பள்ளி மீது தாக்குதல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம் சோலைக்கொட்டாய் கிராமத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் மருத்துவர் ராமதாசு மேல்நிலைப் பள்ளி என்ற பெயரில் பள்ளிக் கூடம் நடத்தப்பட்டு வருகிறது.
விடுதி வசதியுடன் கூடிய அப்பள்ளியில் அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏழை- எளிய மாணவ, மாணவியர் கல்விபயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் பொங்கல் கொண்டாட அப்பகுதியில் உள்ள மக்களும், மாணவ, மாணவியரும் தயாராகி வந்த நிலையில், 3 இரு சக்கர ஊர்திகளில் வந்த 7 பேர் கொண்ட சமூக விரோதக் கும்பல், பள்ளிக்குள் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ஏழை எளிய மாணவ, மாணவியர் படிக்கும் கல்விக் கோவிலுக்குள் நுழைந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. அப்பகுதியில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சில கும்பல்கள்தான் இத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
பள்ளி மாணவ, மாணவியரின் உயிருடன் விளையாடும் இதுபோன்ற வன்முறைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
இதைக் கண்டிக்கும் ராமதாஸ், தலித்களின் வீடுகளுக்குள் புகுந்து நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலை மட்டும் ஆதரித்துப் பேசி வருவது ஏனோ?.












Click it and Unblock the Notifications