ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி - மத்திய அரசு பரிந்துரை!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு இன்று பரிந்துரைத்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் அர்ஜூன் முண்டா தலைமையிலான கூட்டணி அரசுக்கான ஆதரவை சிபுசோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா விலகிக் கொண்டது. ஆட்சியைத் தங்களிடம் ஒப்படைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக ஆட்சியைக் கவிழ்த்தார் சிபுசோரன். இதனால் சட்டசபையைக் கலைக்க பாஜக வலியுறுத்தியது. ஆனால் சிபுசோரனோ, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சி அமைக்கப் போராடினார். இந்தக் கனவு பலிக்கவில்லை. இந்த நிலையில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஆளுநர் சையது அகமது மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று முற்பகலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜார்க்கண்ட் ஆளுநரின் பரிந்துரை குறித்து ஆராயப்பட்டது. பின்னர் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைப்பது என முடிவெடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications