மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்கிறது.. மத்திய அமைச்சரவை முடிவு!

டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அவரது இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜார்க்கண்ட் ஜனாதிபதி ஆட்சி, சிலிண்டர்கள் எண்ணிக்கை உயர்வு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
பின்னர் இந்தக் கூட்டத்தில் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை 6 -ல் இருந்து 9 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் 3 வடகிழக்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் சிலிண்டர் உயர்வு நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, ஏப்ரல் மாதம் முதல் சிலிண்டர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தபடும். தற்போதைய நிலையில் டீசல் விலையில் உயர்வு இல்லை என்றார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தொகை 50% ஆக குறைக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications