வீரர்கள் படுகொலை - தேவையான நடவடிக்கை எடுக்கிறது ராணுவம்: அப்துல் கலாம்
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய கலாம், எல்லையில் ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது மிகக் கொடூரமானது. இது தொடர்பாக மத்திய அரசு கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அப்பகுதியில் உள்ள நிலைமையை ராணுவம் எதிர்கொள்ளும்.
ஏவுகணை அபிவிருத்தி என்பது அமைதியை ஏற்படுத்தக் கூடியது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் மீதான அணுகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்தே ஏவுகணைப் போட்டி உருவானது.
தற்போது உலக நாடுகள் பலவும் அணு ஆயுத சோதனையை நடத்தி வருகின்றன. ஆனால் அணு ஆயுதப் போர் நடைபெற்றது இல்லை. இதனால் ஏவுகணைகள் அமைதிக்கு வழிவகுக்கக் கூடியவை என்றே நாம் சொல்லலாம் என்றார்.












Click it and Unblock the Notifications