ஜார்கண்ட் மாநில கவர்னரின் ஆலோசகராக விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமனம்!

Subscribe to Oneindia Tamil

Vijayakumar IPS
ராஞ்சி: ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளுநரின் முக்கிய ஆலோசகராக விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வாபஸ் பெற்றதையடுத்து அரசு மெஜாரிட்டியை இழந்தது. இதனால் முதல்வர் அர்ஜூன் முண்டா பதவி விலகினார். இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அம்மாநில ஆளுநர் சையது அகமதுவின் ஆலோசகர்களாக மத்திய உள்துறை முன்னாள் செயலாளர் மதுக்கர் குப்தா, ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப். இயக்குனர் கே.விஜய் குமார் ஆகியோர் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான மதுக்கர் குப்தா, மாநில மற்றும் மத்திய அரசில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். 2009-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான விஜயகுமார் தலைமையிலான படை கடந்த 2004 சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்றது. இதன்பின்னர் மத்திய அரசுப் பணிக்கு சென்ற விஜயகுமார், கடந்த 2012 செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தற்போது நக்சல் விவகாரங்கள் துறையின் மூத்த ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+