சோனியா நம்ம மருமகள், ராகுல் பிரதமராகத் தகுதியானவர்: லாலு பிரசாத் யாதவ்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. கட்சி சார்ந்த கூட்டணி இருக்காது. மதச்சார்பற்ற கூட்டணி மற்றும் சாதிய கூட்டணி தான் இருக்கும். நான் காங்கிரஸ் கூட்டணியில் இருக்க விரும்புகிறேன். 2004ம் ஆண்டு பிரதமர் பதவி கிடைத்தும் அதை ஏற்க மறுத்தவர் பாரதத்தின் மருமகளான சோனியா காந்தி.
பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி சிறந்த வேட்பாளர். நான் இங்கு வெளிப்படையாகக் கூற முடியாது. ஆனால் சுமார் 12 அமைச்சர்கள் பிரதமர் பதவிக்கு அடிபோடுகிறார்கள். ஒரு திதிஜி(மமதா பானர்ஜி) இருக்கிறாரே, அவரிடம் பிரதமர் வேட்பாளர்கள் பற்றி கேளுங்கள். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவோ, காங்கிரஸோ அல்லது வேறு எந்த கட்சியோ, கூட்டணியோ எது ஜார்க்கண்டில் அரசு அமைக்க முன்வந்தாலும் அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரித்துவிட்டு குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும். அரபு நாடுகளுடன் ஒப்பிடுகையில் 7 ஆண்டுகள் சிறை மிகக் குறைவான தண்டனை ஆகும். அங்கு பொது இடத்தில் பெண்களை கிண்டல் செய்தால் கூட அந்த நபரை கல்லால் அடித்துக் கொன்றுவிடுவிடுவார்கள். நம் நாட்டிலும் அது போன்று ஏன் கொண்டு வரக்கூடாது? என்றார்.












Click it and Unblock the Notifications