வழிபாட்டு தல விவகாரத்தில் ஆட்சியரை மிரட்டிய வழக்கு: அசாதுதீன் ஓவைஸி சரண்டர்!

Subscribe to Oneindia Tamil

Asaduddin Owaisi
ஹைதராபாத்: வழிபாட்டுத் தல விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரை மிரட்டிய வழக்கில்ஆந்திர பிரதேச மஸ்லிஸ் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைஸி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

மஸ்லிஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக அக்பருதீன் ஓவைஸி அண்மையில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு மேடக் மாவட்டத்தில் வழிபாட்டு தலம் ஒன்றை அகற்றும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக அக்பரூதின் ஓவைஸி மற்றும் அவரது மூத்த சகோதரர் அசாதுதீன் ஓவைஸி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருவரும் சரணடைந்து ஜாமீன் பெற்றனர். ஆனால் கடந்த 2010-ம் ஆண்டு வரை நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். அதன் பின்னர் இவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்நிலையில்தான் அக்பருதீன் ஓவைஸி அண்மையில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அசாதுதீன் ஓவைஸியும் கைது செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பிடிவாரண்ட்டும் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஹைதராபாத் நீதிமன்றத்தில் அசாதுதீன் ஓவைஸி சரணடைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+