டெல்லி பலாத்கார வழக்கு டெல்லியை விட்டு வேறு மாநிலத்திற்குப் போகுமா?
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
டெல்லியை விட்டு வேறு ஒரு மாநிலத்தில் தங்கள் மீதான பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க வேண்டும் என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து குற்றவாளிகளும் மற்றும் ஒரு மாணவனும் மனு செய்துள்ளனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள விரைவு நீதிமன்றத்தில் தங்கள் மீதான விசாரணை நியாயமாக நடக்காது என்று இவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனவே விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற இவர்கள் கோரியுள்ளனர்.
இந்த மனுவை நாளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
இன்று முதல் விசாரணை
இதற்கிடையே, பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை இன்று முதல் டெல்லி விரைவு நீதிமன்றம் நடத்தவுள்ளது.












Click it and Unblock the Notifications