மருத்துவமனையாக புதிய தலைமைச் செயலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் வீரமணி உள்ளிட்டோர் வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, பால்வசந்த குமார் ஆகியோர் தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியுள்ளனர்.
மேலும் ஓமந்தூரார் தோட்டத்தில் சட்டசபையை மாற்றியதில் விதிமீறல் இல்லை. ஏழை எளிய மக்கள் பயன்பாட்டுக்கு பல்நோக்கு மருத்துவமனை தேவை. இதனால் புதிய கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதில் பண விரயம் இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications