தனி நபரின் தகவல் பரிமாற்றத்தைக் கேட்கும் நாடுகள் அதிகரிப்பு: கூகுள்

Subscribe to Oneindia Tamil

Google
தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்களை ஒப்படைக்குமாறு இந்தியா உள்ளிட்ட அரசுகளிடம் இருந்து வரும் கோரிக்கைகள் அதிகரித்திருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2012 - இரண்டாவது அரையாண்டுக்கான வெளிப்படைத்தன்மை குறித்த அறிக்கையில் இந்த விவரங்களை கூகுள் தெரிவித்துள்ளது.

தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்களைக் கேட்பதில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாகவும், இந்தியா இரண்டாமிடத்தில் இருப்பதாகவும் கூகுள் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து பிரேசில் நாட்டிடம் இருந்து தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா சார்பில் 8 ஆயிரத்து 438 கோரிக்கைகள் வந்ததாகவும், இந்திய அரசிடமிருந்து 2 ஆயிரத்து 431 கோரிக்கைகள் வந்ததாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

அரசுகள் கேட்ட தகவல்களில் 68 சதவீதத்தை தங்களால் அளிக்க முடிந்ததாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், பிரேசில் ஆகிய நாடுகள் தனிநபர்களின் தகவல்களை அதிக அளவில் கேட்டதாகவும் கூகுள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+