மும்பை பயங்கரவாத தாக்குதல்... ஹெட்லிக்கு 35 வருட சிறைத் தண்டனை

சிகாகோவில் உள்ள நீதிமன்றம் இந்த தீர்ப்பை நேற்று அளித்தது. 2008ம் ஆண்டு மும்பையி்ல் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவி பெரும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்களை ஏவி விட்டவர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர் ஹெட்லி. மேலும் தாக்குதலுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து பல இடங்களை வேவு பார்த்து்ம் சென்றார்.
அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யப்பட்ட இவரை அமெரிக்க அதிகாரிகள் கோர்ட்டில் நிறுத்தி வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று தண்டனை அளிக்கப்பட்டது.
தீர்ப்பை அறிவித்த மாவட்ட நீதிபதி ஹாரி லீன்வெப்பர் கூறுகையில், நான் மாறி விட்டேன் என்று ஹெட்லி கூறியுள்ளார். ஆனால் அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அமெரிக்க வாழ்க்கை முறைக்கு அவர் மாறி விட்டதாக நான் நம்பவில்லை. எனவே அவர் செய்த தவறுக்கு தண்டனை அவசியமாகிறது என்றார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 166 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 6 அமெரிக்கர்களும் அடக்கம். தீர்ப்பைக் கேட்க வந்திருந்த பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவினரான லிண்டா ராக்ஸ்டேல் என்பவர் கூறுகையில், தாக்குதலில் நானும் காயமடைந்தேன். இன்னும் கூட எனது மனக்காயம் ஆறவில்லை. வாழவே தகுதி இல்லாதவர் ஹெட்லி என்றார் கண்களில் நீர் மல்க.
52 வயதாகும் ஹெட்லிக்கு குறைந்தது 50 வருட தண்டனையாவது கிடைக்கும் என அமெரிக்க அதிகாரிகள் நம்பியிருந்தனர். அதேசமயம் அவருக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. முன்னதாக அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும் அவர் விசாரணைக்கு ஒத்துழைத்ததாலும், குற்றத்தை ஒப்புக் கொண்டதாலும் அதிலிருந்து அவர் தப்பி விட்டார்.
ஹெல்டி தனது சிறைக்காலத்தை அமெரிக்காவிலேயேதான் கழிப்பார் என்றும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என்றும் அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications