கூடங்குளம் அணு உலையில் கசிவு ஏற்பட்ட உண்மை... நாராயணசாமி பரபரப்பு ஒப்புதல்

இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு உலையில் 99.8 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. கடந்த 15ம் தேதியே அணு உலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் சோதனை தள்ளிப்போனதால் தாமதமானது. இது குறித்து அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய தலைவருடன் தொலைபேசியில் பேசினேன். விரைவில் பதில் கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும் என்றார்.
அணு உலையில் கசிவு இருந்ததாக உதயகுமார் உள்ளிட்டோர் கூறி வருவது பற்றி கேட்டதற்கு அவர் கூறுகையில்,
அணு உலையில் கசிவு ஏற்பட்டது உண்மையே. வெப்ப நீரை கடத்திச் செல்லும் அமைப்பில் லேசாக கசிவு ஏற்பட்டது. ஆனால் அதை உடனே கண்டறிந்து சரி செய்துவிட்டார்கள். அணு உலை மூலம் மின்சாரம் தயாரிப்பது மத்திய அரசுக்கு எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அணு உலை பாதுகாப்பு. அதனால் இது குறித்து முழு கவனம் செலுத்தப்படும் என்றார்.
இன்னும் 15 நாட்களில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்கும் என்று கடந்த 15 நாட்களில் 15 முறை தெரிவித்துள்ளீர்களே என்று ஒருவர் கேட்க, அவரோ விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என்று மட்டும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications