இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து என்னை நீக்கியது தவறு - நித்தியானந்தா வழக்கு

மதுரை ஆதீனத்திற்கு எதிராக மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நித்தியானந்தா புதிதாக 2 வழக்குகளை தாக்கல் செய்தார். அவற்றில் முதல் மனுவில், "நான் மதுரையின் 293-வது இளைய ஆதீன மாவேன். என்னை இளைய ஆதீனமாக நியமித்து பல்வேறு பணிகளை செய்யும்படி கூறிய ஆதீனம் திடீரென்று எந்தவித அறிவிப்பும் இல்லாமல், என்னை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டதாக அறிவித்துள்ளார்.
மடத்தின் சட்ட விதிகளின்படி இது தவறாகும். எந்த குறைபாடுகளும் இல்லாத நிலையில் என்னிடம் விளக்கம் பெறாமல் என்னை நீக்குவதற்கு மதுரை ஆதீனத்திற்கு உரிமை இல்லை.
அத்துடன் இளைய ஆதீனமான நான் மடத்திற்குள் பூஜைகளை நடத்த வேண்டும். ஆனால் நானும், எனது தரப்பினரும் மடத்திற்குள் வருவதற்கு மதுரை ஆதீனம் தடையாக உள்ளார். எனவே என்னையும் என் தரப்பினரையும் மதுரை ஆதீனத்திற்குள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும்,"' என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல மற்றொரு மனுவில், ‘‘இளைய ஆதீனமான என்னிடம் கலந்து பேசாமல் திடீரென்று தம்புரான் ஒருவரை மதுரை ஆதீனம் நியமனம் செய்துள்ளார். இதுபோல தம்புரான் நியமிக்கும் வழக்கம் மதுரை ஆதீனத்தின் விதிகளில் இல்லை. எனவே விதிகளுக்கு மாறாக உள்ள அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.'' என்று கூறப்பட்டுள்ளது.
இநத மனுக்கள் நீதிபதி கே.குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. அப்போது ஆதீனம் தரப்பு வக்கீல்கள் வி.நாகேந்திரன், ஜெ.ராமமூர்த்தி ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்குகளுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து நித்தியானந்தா தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications