விடை பெற்றார் ஹிலரி க்ளிண்டன்: புதிய அமைச்சரானார் கெர்ரி!

முன்னதாக முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் ஒபாமாவிடம் கொடுத்தார். ஜான் கெர்ரி புதிய செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரது நியமனத்தை அமெரிக்க செனட் சபை ஏற்கனவே அங்கீகரித்து இருந்தது.
ஹிலரியின் உருக்கமான பிரியாவிடை
2009 ஆம் ஆண்டு ஹிலரி பதவியேற்றது முதல் நான்கு ஆண்டுகளாக சுமார் 70,000 ஊழியர்கள் கொண்ட வெளியுறவுத்துறையை சிறப்பாக நிர்வகித்து வந்தார். அதிகப்படியான தூரம் பயணம் செய்து உலகின் முக்கிய தலைவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தினார். சமீபத்திய அமெரிக்காவில் ஹிலரி தன்னிகரற்ற வெளியுறவுத்துறை செயலாளர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
அமெரிக்க மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு மிகவும் உயர்ந்து உள்ளது. இந்த பதவியிலிருந்து விலகிச்செல்வதை முன்னிட்டு, துறை ஊழியர்கள் மத்தியில் உருக்கமான உரையாற்றினார். வெளியுறவுத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் மிகச்சிறப்பாக செயலாற்றி வருவதாகவும், பென்டகனில் செயல்பட்டு வரும் ராணுவத்துறைக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்ததாக, நீங்கள் மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
தூதரகத்தில் குண்டு வெடித்தது
ஹிலரி பதவியிலிருந்து ஓய்வு பெறும் கடைசி நாளில், துருக்கி நாட்டின் அங்காரா நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது மனிதவெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அதை வருத்தத்துடன் குறிப்பிட்ட ஹிலரி, "நாம் மிகவும் நெருக்கடியான, அபாயகரமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். இன்று தூதரகத்தில் நடந்த குண்டு வெடிப்பு அதை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. நமது தூதரக அதிகாரிகளுடனும், துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சருடனும் பேசியுள்ளேன். 21ம் நூற்றாண்டில் பல்வேறு சோதனைகள் நிறைந்து இருந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிகரமாக செயல்படும் அளவுக்கு நமது வெளியுறவுத்துறை வலிமையுடன் இருக்கிறது என்று தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
கன்யாகுமரி தமிழர் மெர்வின் ராஜதுரை
வெளியுறவுத் துறையில். ஹிலரியின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் கன்னியாகுமரியில் பிறந்த மெர்வின் ராஜதுரை ஆவார். அவர் இந்திய விவகாரங்கள் தொடர்பான பணிகளை கவனித்து வருகிறார் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications