நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக நிச்சயமாக போட்டி: வைகோ (கூட்டணி யார் கூட சார்!)

ஒரு கட்சி தேர்தலில் போட்டியிடுவோம் என்பதைக் கூட ஒரு அறிவிப்பாக வெளியிட வேண்டிய நிலையில் இருக்கிறது மதிமுக. காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக கடைசி நேரத்தில் இடப் பங்கீடு விஷயத்தில் முதுகில் குத்தியதையடுத்து தேர்தலிலேயே போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார் வைகோ.
இந் நிலையில் மதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசுதான் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது.
எனவே, மற்ற கட்சிகளைப் போல ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவும் அறிக்கை வெளியிடுவதை ஏற்க முடியாது. மத்திய அரசை வற்புறுத்தி ராஜபக்சே வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்கு அந்தக் கட்சி தயாரா?.
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவோம் என்று அறிக்கை வெளியிட்டால் நான் திமுகவை விமர்சிக்க மாட்டேன்.
ராஜபக்சேவின் வருகையை கண்டித்து என் தலைமையில் டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டமும், திருப்பூர் துரைசாமி தலைமையில், திருப்பதியில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டமும் நடத்தப்படும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக நிச்சயமாக போட்டியிடும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications