லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மலாலா டிஸ்சார்ஜ்!
லண்டன்: தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் பெண் கல்வி, உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த சிறுமி மலாலாவை கடந்த அக்டோபர் 9-ந் தேதி தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இங்கிலாந்து அழைத்து வரப்பட்ட அச்சிறுமி பிர்மிங்ஹாம் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் அடுத்தடுத்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் குணமடைந்த மலாலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். அவர் தமது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் தொடர்ந்து தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.
மலாலாவின் தந்தை ஜியாவுதின் யூசுப்சைக்கு ஏற்கெனவே பிர்மிங்ஹாமில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications