மாமியாருடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
காரைக்குடி: காரைக்குடியில் வீட்டில் உட்கார்ந்து மாமியாருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு முகமூடிக் கொள்ளையன் ஓடி விட்டான். அவனைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காரைக்குடி பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் தொழிலதிபர். இவரது மனைவி விஜயதர்சினி. நேற்று இரவு 8 மணி அளவில் வீட்டில் விஜயதர்சினி தனது மாமியார் அம்சவல்லியுடன் பேசி கொண்டு இருந்தார்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்தான். பின்னர் அவன் கத்தியை காட்டி மிரட்டி விஜயதர்சினி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு ஓடிவிட்டான்.
உடனே விஜயதர்சினி திருடன், திருடன் என கூச்சல் போட்டார். அதற்குள் அந்த ஆசாமி மின்னல் வேகத்தில் ஒடி மறைந்து விட்டான். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications