லோக்சபா தேர்தல் 2014 - பாஜக பிரசாரக் குழுத் தலைவராகிறார் மோடி

பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க பாஜக தலைமை முடிவு செய்து விட்டது. இதுதொடர்பான எதிர்ப்புகளையும் சமாளிக்க அது ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் மோடியை பிரதமர் பதவிக்குக் கொண்டு வருவதற்கான பல்வேறு முஸ்தீபுகளையும் அது செய்யத் தொடங்கி விட்டது.
முதல் கட்டமாக லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுவின் தலைமைப் பொறுப்பை மோடியிடம் கொடுக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாம்
இதன் மூலம் தனது கொள்கைகள், திட்டங்கள், குஜராத்தை மேம்படுத்த தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை தேசிய அளவில் கொண்டு செல்ல பாஜக தலைமை, மோடிக்கு பிளாட்பாரம் அமைத்துக் கொடுப்பதாக கருதப்படுகிறது. பாஜகவின் இந்தத் திட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் சம்மதம் தெரிவித்து விட்டதாம்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாஜக தேசிய செயற்குவு மற்றும் தேசியக் குழுக் கூட்டங்களில் இதற்கு ஒப்புதல் பெறப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மோடிக்கு உதவியாக பல்வேறு குழுக்களையும் அமைக்க பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளாராம். மேலும் பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாம். குறிப்பாக பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தனித்தனியாக குழு அமைத்து பிரசாரம் செய்யவுள்ளனராம்.












Click it and Unblock the Notifications