For Quick Alerts
For Daily Alerts
Just In
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறப் போவது இல்லை: வீரப்பமொய்லி
பெட்ரோல், டீசல் விலை கடந்த வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவில் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. அப்போது பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு ரூ1.50 காசும் டீசல் 1 லிட்டருக்கு 45 காசுகளும் உயர்த்தப்பட்டன. நாடு முழுவதும் இது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன் எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துள்ளார்.
Comments
English summary
Oil minister M Veerappa Moily on Monday ruled out a rollback in the Rs 1.50 a litre hike in petrol and 45 paise per litre increase in diesel rates saying only a small raise has been passed on to consumers
Story first published: Monday, February 18, 2013, 17:18 [IST]