இத்தாலி ஹெலிகாப்டர் ஊழல் பற்றி விவாதிக்க தயார்: பிரதமர் மன்மோகன்சிங்

இத்தாலியின் ஃபின்மெக்கானிக்கா மற்றும் அகஸ்டா வெஸ்டா நிறுவனத்திடமிருந்து நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களுக்காக ரூ3600 கோடியில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இந்தியாவின் இந்த ஆர்டரைப் பெறுவதற்காக ரூ360 கோடி லஞ்சப் பணம் கொடுத்திருக்கிறது ஃபின்மெக்கானிக்கா. இந்த லஞ்சப் பணத்தை பெற்றது யார்? யார்? என்ற கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு ராஜிவ் காந்தி அரசை கவிழ்த்துப் போட்ட போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் சர்ச்சையைப் போல வெடித்துக் கொண்டிருக்கும் இத்தாலிய ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் பார்லிமெண்ட்டில் பெரும் பிரளயத்தை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இத்தாலிய ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ஊழலும் ஒளிவு மறைவும் இல்லை.. இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
கடந்த பல நாட்களாக வெடித்துக் கொண்டிருக்கும் இத்தாலிய ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் மன்மோகன்சிங் தற்போதுதான் முதல் முறையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications