காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடக் கூடாது: மன்மோகனிடம் ஜெகதீஷ் ஷெட்டர் குழு
Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி 20-ந் தேதிக்குள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் கெஜட்டில் மத்திய அரசு இன்னமும் நடுவர் மன்றத் தீர்ப்பை வெளியிடவில்லை.
இந்த நிலையில் கர்நாடகா மாநில அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று மாலை டெல்லியில் சந்தித்துப் பேசினர். இந்தக் குழுவில் துணை முத்ல்வர் அசோக், கர்நாடகா அமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, ரகுமான்கான் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தமிழகத்துக்குத் தொடர்ந்தும் காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டாம் என்றும் அக்குழு கேட்டுக் கொண்டது.












Click it and Unblock the Notifications