16 வயது சிறுமியை சீரழித்த 50 வயது நபர்
தர்மபுரி: தர்மபுரி அருகே 16 வயதேயான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக நடந்துள்ளார் 50 வயதான நபர்.
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி அடுத்த முத்தம்பட்டி அருகே உள்ள மணிபுரத்தை சேர்ந்தவர் சிவராஜன். இவருக்கு 16 வயதில் ராஜி என்ற மகள் உள்ளார். இவருக்குப் படிப்பு வரவில்லை. இதனால் பள்ளிக்குப் போகாமல் வீட்டில் இருந்துவருகிறார்.
இந்தநிலையில் முத்தம்பட்டியை சேர்ந்த கணேசன் என்ற 50 வயது நபர், ஆழ்துளைக் குழாய் கிணறு அமைக்கும் பணிக்காக அங்கு வந்துள்ளார். வந்தவர் அடிக்கடி ராஜி வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்துள்ளார். இதில் ராஜியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த, 14-ம் தேதி இரவு 7 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த ராஜியை கணேசனு், அவரது உறவினர்களான 45 வயது ரமேஷ், 30 வயது ராஜு ஆகியோர் கடத்திச் சென்றனர்.
பின்னர் மொரப்பூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்துத்தகவல் அறிந்து போலீஸார் விரைந்து சென்று ராஜியை மீட்டனர்.
கணேசன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications