குஷ்பு விவகாரம்.. அறிவாலயம் பக்கம் போகாத கருணாநிதி!!
சென்னை: நடிகை குஷ்பு விவகாரம் தொடர்பாக அண்மையில் தொடர்ச்சியாக சில நாட்கள் அறிவாலயம் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்திருக்கிறார் திமுக தலைவ கருணாநிதி.
நாள்தோறும் அறிவாலயம் வந்துவிடுவது கருணாநிதியின் வழக்கம். சென்னையில் இருந்தால் அவரது மகன் மு.க.ஸ்டாலினும் அறிவாலயம் வந்துவிடுவது வழக்கம்.
அண்மையில் ஆனந்த விகடனில் குஷ்பு, ஸ்டாலினுக்கு எதிராக பேட்டி கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து திருச்சியில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது திருச்சியில் இருந்த கருணாநிதி, குஷ்பு மீது தாக்குதல் நடத்தியவர்களை கட்சியை நீக்க வேண்டும் என்றாராம். ஆனால் ஸ்டாலினோ அதெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது, நடவடிக்கை எடுத்தால் இரு தரப்பிலும் எடுக்க வேண்டும் என்று கறாராக கூறியிருக்கிறார்.
இதனால் தமது எதிர்ப்பை தெரிவிக்க, சென்னை திரும்பிய கருணாநிதி அறிவாலயம் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லையாம். ஆனால் கருணாநிதியின் இந்த போராட்டத்துக்கெல்லாம் ஸ்டாலின் பதில் சொல்லவே இல்லையாம்..
ஆனால் ஸ்டாலின்- கருணாநிதி இடையே ஏற்பட்ட இந்த இடைவெளி 'ஒரு சிலருக்கு' சாதகமாகிவிடக் கூடும் என்று எச்சரிக்கவே சமாதானமாகி அப்பா கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் போயிருக்கிறார் ஸ்டாலின்.
இதையடுத்தே அறிவாலயத்துக்கு கருணாநிதியும் மீண்டும் வர ஆரம்பித்தாராம்.












Click it and Unblock the Notifications