ஆலங்குளம் அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஊத்துமலையை அடுத்துள்ள மேலக்கலங்கல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஏசுசங்கர். லாரி டிரைவர். இவருக்கு எட்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு அருகில் வெளியே சென்றுள்ளார் ஏசுசங்கரின் மகள். நீண்டநேரம் கழித்து வீட்டிற்கு வந்த சிறுமி அழுதுகொண்டே இருந்தார். இதுகுறித்து பெற்றோர் அவளிடம் விசாரித்தனர்.
அப்போது தன்னிடம் அதே ஊரை சேர்ந்த அந்தோணி மகன் செல்வம் (20) தவறாக நடந்தது குறித்து தெரிவித்தார். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக ஏசுசங்கர் ஊத்துமலை போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் கலைமணி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக செல்வத்தை கைது செய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றார்.












Click it and Unblock the Notifications