கூடங்குளத்தில் அணுக்கசிவுக்கு வாய்ப்பே இல்லை... சொல்கிறார் முன்னாள் தலைவர்

கூடங்குளம் அணுவுலையில் கசிவு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்பட்டுள்ளது தவறான தகவல். அணு உலை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அணு உலையே செயல்படாதபோது, உலையில் அணுக்கசிவு என்பது சாத்தியமில்லை. எனவே இது, அரசியல் நோக்கங்களுக்காகக் கூறப்படும் தவறான தகவல்தானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.
பாதுகாப்பாகவே உள்ளது.
உலக அளவில் 430 அணு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஜப்பானில் மட்டும் 50 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், 2 மட்டுமே பழுதடைந்துள்ளன. இவற்றைத் தவிர உலகில் வேறு எந்த அணு மின் நிலையங்களிலும் பழுதோ பாதிப்போ எற்பட்டதாக புகாரோ தகவலோ இல்லை. அதனால் அணுமின் உற்பத்தி நிலையங்கள் பாதுகாப்புடனே உள்ளன.
இயந்திரத்தில் கோளாறு
அணுவுலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற காலத்தில் அணுவுலைக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததாலும், உள்ளே நிபுணர்கள் அனுமதிக்கப்படாததாலும், மேலும் உலைக்குத் தேவையான இயந்திரங்கள் சரியாகப் பொருத்தப்படாததாலும், சோதனை ஓட்டத்தின்போது சில தவறுகள் கண்டறியப்பட்டன. அவை ஒவ்வொன்றான சரிசெய்யப்பட்டுவிட்டன.
இரண்டு வாரத்தில் மின் உற்பத்தி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதல் யூனிட்டில் மின் உற்பத்தி இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் துவங்க, தயார் நிலையில் உள்ளது. அதன் அடுத்த யூனிட் செப்டம்பர் மாதத்தில் செயல்படத் துவங்கும்.
கூடங்குளத்தில் 6000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க வசதி உள்ளன. மேலும் 2 யூனிட் அமைக்க ரஷ்ய அரசுடன் இந்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது என்றார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.












Click it and Unblock the Notifications