'மனித உரிமை மீறல்' நாடான இலங்கைக்கு இங்கிலாந்தின் ஆயுத விற்பனை நீடிக்கிறது: 'இன்டிபென்டென்ட்‘ நாளேடு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: மோசமான மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் இலங்கைக்கு மில்லியன் கணக்கான பவுண்ட்ஸ் மதிப்பிலான சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கடந்த ஆண்டு இங்கிலாந்து விற்பனை செய்திருப்பதாக அந்நாட்டின் " 'இன்டிபென்டென்ட்‘ நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது.

இன்றைய 'இன்டிபென்டென்ட்‘ நாளேட்டின் தலைப்புச் செய்தியான இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

அரசு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இலங்கைக்கு 3 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளன. விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்களில் கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள், குண்டுதுளைக்காத உடற்கவசங்கள் உள்ளிட்டவை அடக்கம்.

மனித உரிமை மீறல்களால் இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சகத்தால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருக்கும் கவலைக்குரிய நாடாக இலங்கையை பட்டியலிட்டு வைத்திருந்தது. இப்படிப் பட்டியலிடப்பட்ட பிறகும் கடந்த ஜுலை ஆண்டு முதல் செப்டம்பர் வரையில் இலங்கைக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வந்திருக்கிறது.

600 தாக்குதல் துப்பாக்கிகள், 650 துப்பாக்கிகள், 100 கைத்துப்பாக்கிகள், 50 தாக்குதல் செட் கண்கள் ஆகியவற்றை விற்க இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இலங்கைக்கு 330,000 பவுண்ட்ஸ் மதிப்பிலான வெடிபொருட்களையும், 665,000 பவுண்ட்ஸ் மதிப்பிலான குண்டு துளைக்காத உடற்கவசங்களையும் விற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2008 தொடக்கம் 2012 ஜுன் வரையில், இலங்கைக்கு 12 மில்லியன் பவுண்டஸ் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+