கையும் களவுமாக பிடிபட்டால் கற்பழிப்பு என்கிறார்கள்... பெண்கள் குறித்து கேரள எம்.பி பேச்சு!

சுதாகரனின் இந்தப் பேச்சுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூர்நெல்லி பாலியல் பலாத்கார வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு சொன்னார் சுதாகரன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கற்பழிப்பு வேறு, விபச்சாரம் வேறு. இரண்டையும் தனித் தனியாக பார்க்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் அமைதி நிலவ முடியும். இன்று சில பெண்கள் மனம் ஒத்து உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் கையும் களவுமாக பிடிபட்டு விட்டால், கற்பழிப்பு என்று கூற ஆரம்பித்து விடுகிறார்கள். இது பேஷனாகி விட்டது.
மனம் விரும்பித்தானே செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். பிறகு ஏன் தப்ப நினைக்க வேண்டும். சூர்யநெல்லி சம்பவத்தில் கூட அந்தப் பெண் 40 நாட்கள் அந்த ஆண்களுடன் இருந்துள்ளார். சம்மதம் இல்லாவிட்டால் இருந்திருப்பாரா. கற்பழிப்பு என்றால் தப்பி ஓட முயற்சித்திருக்கலாமே... என்று கூறியுள்ளார் சுதாகரன்.
1996ம் ஆண்டு பள்ளிச்சிறுமியாக அப்போது இருந்த அந்தப் பெண் தனது கிராமமான சூர்யநெல்லியிலிருந்து கடத்தப்பட்டார். அதன் பின்னர் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 42 பேருக்கு அவர் இறையானார். கிட்டத்தட்ட 40 நாட்கள் அவரை பாலியல் ரீதியாக சீரழித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தற்போது ராஜ்யசபா துணைத் தலைவராக உள்ள பி.ஜே.குரியனின் பெயரும் அடிபடுகிறது. அவரை கடந்த 2007ம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து உச்சநீதிமன்றம் விடுவித்திருந்தது. ஆனால் வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை என்பது சூர்யநெல்லி பெண்ணின் குற்றச்சாட்டாகும்.
இந்தப் பின்னணியில்தான் காங்கிரஸ் எம்.பி. சுதாகரன் இப்படிப் பேசியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications