Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹைதராபாத் குண்டுவெடிப்புகளில் 14 பேர் பலி-119 பேர் படுகாயம்: சம்பவ இடத்தை பார்வையிட்ட ஷிண்டே தகவல்

Subscribe to Oneindia Tamil

Sushilkumar Shinde
ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகரம் ஹைதராபாத் தில்சுக்நகர் பகுதியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த இடங்களை உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று பார்வையிட்டார். அப்போது இந்த சம்பவத்தில் 14 பேர் பலியாகி இருப்பதாகவும் 119 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஹைதராபாத் தில்சுக் நகர் பகுதியை இன்று காலை பார்வையிட்ட சுஷில்குமார் ஷிண்டே படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரையும் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களைப் பார்வையிட்டிருக்கிறேன். படுகாயமடைந்தவர்களையும் சந்தித்துப் பேசினேன். சிலரது நிலைமை கவலைக் கிடமாக இருக்கிறது. 14 பேர் பலியாகி இருக்கின்றனர். 119 பேர் படுகாயமடைந்துள்ளனர். 6 பேரின் நிலைமை கவலைக் கிடமாக இருக்கிறது.

முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது போலீசாரின் அலட்சியம்தானா என்பதை இப்போது சொல்ல முடியாது. நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் நிலையில் கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க இயலாது என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+