ஹைதராபாத் குண்டுவெடிப்புகளில் 14 பேர் பலி-119 பேர் படுகாயம்: சம்பவ இடத்தை பார்வையிட்ட ஷிண்டே தகவல்
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் தில்சுக் நகர் பகுதியை இன்று காலை பார்வையிட்ட சுஷில்குமார் ஷிண்டே படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரையும் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களைப் பார்வையிட்டிருக்கிறேன். படுகாயமடைந்தவர்களையும் சந்தித்துப் பேசினேன். சிலரது நிலைமை கவலைக் கிடமாக இருக்கிறது. 14 பேர் பலியாகி இருக்கின்றனர். 119 பேர் படுகாயமடைந்துள்ளனர். 6 பேரின் நிலைமை கவலைக் கிடமாக இருக்கிறது.
முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது போலீசாரின் அலட்சியம்தானா என்பதை இப்போது சொல்ல முடியாது. நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் நிலையில் கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க இயலாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications