ஹைதராபாத் குண்டுவெடிப்பு-மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அறிக்கையில், குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தண்டிக்காமல் விடமாட்டோம். ஆந்திர அரசுக்கு உதவ உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பையடுத்து பதற்றம் அடையாமல் நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும்.
குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதேபோல் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications