தர்மபுரி.. ஊரை எரித்துவிட்டு ”நீதி கோரி” ஆர்ப்பாட்டம்- டாக்டர் ராமதாஸும் பங்கேற்பு!
சென்னை: தர்மபுரியில் தலித் மக்களின் வீடுகளை சூறையாடியவர்களுக்கு நீதி கோரி அவர்களுடன் சேர்ந்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
தர்மபுரியில் தலித் மக்களின் வீடுகள் ‘வேட்டையா'டப்பட்டதைத் தொடர்ந்து ஊர் ஊராகப் போய் சாதி சங்கங்களின் தலைவர்களை டாக்டர் ராமதாஸ் சந்தித்துப் பேசி வருகிறார். இந்நிலையில் தலித் மக்களின் வீடுகளை ‘வேட்டையா'டிய சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இப்படி சிறையில் அடைக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நீதி கோரி போராட்டம் நடத்தினர். தர்மபுரி கலவர வழக்கை சிபிஐக்கு மாற்றவும் அவர்கள் கோரினர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் முழக்கங்களை எழுப்பினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை தியாகராய நகர் போக் சாலையில் ராமதாஸ் தலைமையில் கூட்டத்தில் கல் வீச்சு சம்பவம் நடைபெற்றதால் ராமதாஸ் கலந்து கொண்ட இன்றைய போராட்டத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications