கடலூரில் 1 கிலோ தங்கம் வைத்திருந்த போதை நபர்... பறிமுதல் செய்த போலீஸ்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் பேருந்து நிலையத்தில் போதையில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு கடலூர் காவல்துறையினர் மேற்கொண்ட ரோந்தின்போது, சந்தேகத்தின்பேரில் பேருந்துநிலையத்தில் ஒரு உறங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அவரது பெயர் கிருபானந்த வாரியார் என்பதும் கடலூரை சேர்ந்த இவர் நகை தொழிலாளர் என்பதும் தெரியவந்தது. அப்போது அவரிடம் தங்கம் மற்றும் பணம் ஆகியவை இருப்பது தெரியவந்தது அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இவரிடம் இருந்த தங்க கட்டிகளுக்கு முறையான ஆவணம் இல்லாததால் அதுபற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications