திண்டுக்கல் கோர்ட்டுக்கு விஜயகாந்த் வந்தபோது கத்தி வீச சதி - பரபரப்புத் தகவல்

திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி விஜயகாந்த், விழா ஒன்றில் பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவை அவதுறாக பேசியதாக, அரசு வக்கீல் ஜெயபாலன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் பிப்ரவரி 28ல் விஜயகாந்த் ஆஜரானார். அப்போது தேமுதிக தொண்டர்கள் ஏராளமாக திரண்டனர்.
கோர்ட்டின் முதல்தளத்திற்கு படி வழியாக விஜயகாந்த் ஏறி செல்லும் போது இல்லாத கத்தி, அவர் கீழே இறங்கி வரும்முனபாக படியில் கிடந்தது. இதையடுத்து போலீஸார் கத்தியைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் அந்தக் கத்தியை, திண்டுக்கல் சந்துக்கடை தெருவில் உள்ள ஒரு கடையில் வாங்கியுள்ளனர் என்று தெரிய வந்தது. மேலும் விஜயகாந்த் படியில் ஏறும்போது அவர் மீது திட்டமிடப்பட்டிருந்தாகவும் போலீஸார் நம்புகின்றனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சதித் திட்டத்தைத் தீட்டியது யார் என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications