ஆந்திராவில் 12 ஆண்டுகளுக்கு முந்தைய 10 கிலோ வெடிபொருள் அழிப்பு
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதிக்கான சாலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டிருந்த 10 கிலோ வெடிப்பொருட்களை ஆந்திர போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட போலீசாரிடம் அண்மையில் சிக்கிய மாவோயிஸ்டுகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சித்தூர் மாவட்டம் பீலேர் அடுத்த அப்பிரெட்டிகாரிபள்ளி அருகே வனப்பகுதிக்கு செல்லும் சாலையில் வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறினர்.
இதைத் தொடர்ந்து கடந்த 6 நாட்களாக ஏர்ராவாடி பாளையம், தலபலா, அப்பிரெட்டிகாரிபள்ளி, ஏலமந்தா கிராமங்களில் நவீன கருவிகளுடன் ரகசிய சோதனையில் ஆந்திர போலீசார் ஈடுபட்டனர். நேற்று காலை அப்பிரெட்டிகாரிபள்ளி கிராமம் அருகே வனப்பகுதிக்கு செல்லும் சாலையில் வெடி பொருட்கள் புதைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர்.
அங்கு இரண்டு பெட்டிகளில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை போலீசார் அழித்தனர். இதுகுறித்து பிலேர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி கூறுகையில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் அவர் திருமலை செல்லும் வழியில் அலிபிரியில் சாலையோரம் புதைக்கப்பட்ட வெடிகுண்டு மூலம் கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. அதில் அவர் உயிர் தப்பினார். இதைதொடர்ந்து அவரை கொலை செய்ய இப்பகுதியில் வெடி பொருட்கள் சாலையில் புதைக்கப்பட்டதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications